tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் ஏ.நல்லசிவன் நினைவு நாள்

ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டுக்குரிய இயல்பான குணங்களினால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சரியான ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில்  கட்டி வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர் தோழர் நல்லசிவன் . 

சட்டமன்ற மேலவையிலும் நாடாளு மன்ற மாநிலங்களவையிலும் அவர் பணியாற்றிய போது தமிழகத்தின் பிரச்சனைகளை ஆழ்ந்து கவனித்து அதை மன்றங்களில்எடுத்துரைத்தார். வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை பிரச்சனையை மக்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவதிலும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவும் அவர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று தமிழில் தந்தி வசதியைக் கொண்டுவர அவர் எடுத்த சிறப்பான முயற்சிகளை அனைவரும் பாராட்டினர். கட்சியின் மாநிலச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், என பல்வேறு பதவிகளில் திறம்படப் பணியாற்றியவர் தோழர் நல்லசிவன். தொழிற்சங்கத்தின் சார்பிலும் பல முறை அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். தனது பயண அனுபவங்களை பத்திரிகைகளிலும், நூல் வடிவாகவும் வெளியிட்டுள்ளார். கட்சியிலும், தொழிற்சங்கத்திலும் எத்தனையோ பொறுப்புக்களை வகித்து வந்த போதிலும் மிகுந்த எளிமையான ஒரு வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து வந்தார். அவருடைய தன்னடக்கம் அனைத்து கம்யூனிஸ்டுகளும், பொது நல ஊழியர்களும் பின்பற்றத்தக்கதாகும்.\

1940 ல் கட்சியில் சேர்ந்த அவர் 1997ம் ஆண்டில் காலமாகும் வரை 57 ஆண்டுகள் உழைக்கும் மக்களுக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக என்றென்றும் விளங்கும்.

===பெரணமல்லூர் சேகரன்===

;